search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகனங்கள் பறிமுதல்
    X
    வாகனங்கள் பறிமுதல்

    வேதாரண்யத்தில் தடையை மீறி அடையாள அட்டை இல்லாமல் வந்த 15 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

    வேதாரண்யத்தில் தடையை மீறி அடையாள அட்டை இல்லாமல் மோட்டார் சைக்கிளில் வந்த 15 நபர்கள் பிடிக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்தல், சோதனைச் சாவடி அமைத்து வாகனங்களை கிருமிநாசினி தெளித்தல், கொரோனா படம் வரைந்து விழிப்புணர்வு என பல்வேறு கட்டங்களாக தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நகராட்சி பகுதிக்குள் வருவதற்கு 3 விதமான நிறங்களை கொண்ட வண்ண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வாரத்துக்கு 2 நாட்கள் மட்டுமே குடும்பத்தில் இருந்து ஒருவர் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    வேதாரண்யம் டி.எஸ்.பி. சபிபுல்லா, நகராட்சி ஆணையர் பிரதான்பாபு ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் அடையாள அட்டை இல்லாமல் மோட்டார் சைக்கிளில் வந்த 15 நபர்கள் பிடிக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. முக கவசம் இல்லாமல் வந்தவர்களுக்கு நகராட்சி ஆணையர் பிரதான் பாபு கவசங்களையும் வழங்கினார்.

    Next Story
    ×