search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆவண எழுத்தர்களுக்கு நிவாரண நிதி வழங்க கோரிக்கை
    X
    ஆவண எழுத்தர்களுக்கு நிவாரண நிதி வழங்க கோரிக்கை

    ஊரடங்கு உத்தரவால் ஆவண எழுத்தர்கள் பாதிப்பு- அரசு நிவாரண நிதி வழங்க கோரிக்கை

    ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆவண எழுத்தர்கள் மற்றும் முத்திரைதாள் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட நிவாரணத் தொகையை அரசு அறிவிக்கவேண்டும் என்று ஆவண எழுத்தர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    சீர்காழி:

    கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே3 வரை மத்திய, மாநில அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினால் பொது மக்கள், கூலிதொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பாதிப்பை சரி செய்யும் வகையில் தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை மூலம் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், நலவாரிய உறுப்பினர்களுக்கு நிவாரணநிதியுதவியை வழங்கி வருகிறது.

    அதேபோல் பதிவு செய்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கும் அரசு நிதியுதவியினை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. ஆனால் கடந்த 30 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ள ஆவண எழுத்தர்கள் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கு எந்த உதவியும் அறிவிக்கப்படவில்லை.

    ஊரடங்கு உத்தரவில் சில விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டதன் மூலம் கடந்த 20ம்தேதி முதல் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆனால் போக்குவரத்து இல்லாததாலும், பொதுமக்களள் வருகை குறைவாலும் பத்திரபதிவு அலுவலகத்திற்கு யாரும் வருவதில்லை. ஆன்லைன் பத்திப்பதிவு மேற்கொள்ளும் போது ஆவண எழுத்தர்கள் மூலமாக அவர்களுடைய அலுவலகத்தில் கணினியில் பத்திரம் தட்டச்சு செய்யப்பட்டு, டோக்கன் வழங்கப்பட்டு அதன் பின்னரே பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆவணங்கள் பதிவுக்கு ஏற்றப்படும்.

    ஆனால் ஆவண எழுத்தர்களின் அலுவலகம் (கணினி தட்டச்சு) திறந்து செயல்பட எந்தவித அறிவுறுத்தலும் அரசால் தெளிவாக வழங்கப் படவில்லை. இதனால் பத்திரப்பதிவு அலுவலகம் செயல் பட்டாலும் கடந்த 1 மாதகாலமாக ஆவண எழுத்தர்கள், முத்திரைதாள் விற்பனையாளர்கள் பணிகள் இன்றி வருவாய் இழந்து சிரமப்படுகின்றனர்.ஆகையால் பதிவு செய்யப்பட்ட ஆவண எழுத்தர்கள், முத்திரைதாள் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட குறைந்தபட்ச நிவாரணத் தொகையை அரசு அறிவிக்கவேண்டும்.

    ஆவண எழுத்தர்களுக்கு கொரோனா தொற்று நோயால் இறப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்களது குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி, வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என சீர்காழி வட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர்கள், ஆவண எழுத்தர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×