என் மலர்
செய்திகள்

அரிசி
வாலாஜாவில் இளைஞர்கள் முன்னேற்ற கைபந்து கிளப் சார்பில் 300 குடும்பத்தினருக்கு உதவி
ஆற்காடு இளைஞர் முன்னேற்ற கைபந்து கிளப் சார்பில் ஏழை எளிய மக்கள் 300 குடும்பத்தினருக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி அரசு கலைக்கல்லூரி முன்பு நடைபெற்றது.
வாலாஜா:
ஆற்காடு இளைஞர் முன்னேற்ற கைபந்து கிளப் சார்பில் ஏழை எளிய மக்கள் 300 குடும்பத்தினருக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி அரசு கலைக்கல்லூரி முன்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் ஜெயமுருகன் தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன், துணை சேர்மன் தங்கதுரை, பொருளாளர் பாலசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு கலந்து கொண்டு பெல்லியப்பா நகர், விசி.மோட்டூர், அனந்தலை, குடிமல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த வாழ்வாதாரம் இழந்து வாடும் 300குடும்பத்தினருக்கு 5கிலோ அரிசியை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கிளப் பயிற்சியாளர் மல்லிகேஷ்வர் குமார், உறுப்பினர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






