என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர், நர்சுகள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

    சென்னை டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
    ஆம்பூர்:

    சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த 55 வயதான டாக்டர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

    அவரது உடலை அடக்கம்செய்ய சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள கல்லறைக்கு ஆம்புலன்சில் உடலை கொண்டு சென்றனர்.

    அங்கு வசிக்கும் பொதுமக்கள் டாக்டர் உடலை அடக்கம் செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டாக்டர் உடலைக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது கற்களை வீசினார்கள். இது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர்.

    அவர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு கண்டன கோ‌ஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×