என் மலர்
செய்திகள்

அதிமுக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம், கிருமி நாசினி- ஜனனீ சதீஷ்குமார் வழங்கினார்
வேலூர்:
வேலூர் அண்ணா சாலையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தின் அருகே தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள், அம்மா உணவக பணியாளர்கள், மற்றும் சுகாதாரம் பணியாளர்கள், சுமார் 1000 பேருக்கு வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் கபசுரக் குடிநீர், முககவசம் கைகளை கழுவ சோப், கிருமி தொற்றிலிருந்து பாதுகாக்க கிருமி நாசினி ஆகியவற்றை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ சதீஷ் குமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேலூர் மேற்கு பகுதி செயலாளர் எஸ்.நாகு என்கிற நாகராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சூளை மணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அண்ணாமலை, அல்லாபுரம் மேற்கு பகுதி செயலாளர் ஏ.ஜி.பாண்டியன், நிர்வாகிகள் ராமஜெயம், முனுசாமி மகேஸ்வரி, மாநகராட்சி அலுவலர் வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு முதல்வர் வழங்கிய அறிவுரைகளை எடுத்துக் கூறியும், முககவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதனை பொதுமக்களுக்கு விளக்கியும் சொல்லப்பட்டது. கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கழுவிய பின்னரே முகங்களில் தொடுவதும், சாப்பிடுவதற்கு முன்னரும், பின்னரும் கைகளை கழுவ வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேலும் அம்மா உணவகத்தின் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வரும் மதிய உணவானது ஊரடங்கு முடியும் வரை தொடரும் என சதீஷ்குமார் தெரிவித்தார்.






