என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
ஆலங்குடி அருகே இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு உணவு பொருட்கள்
ஆலங்குடி அருகே ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 447 குடும்பம் வசித்து வருகிறது.
முகாமில் உள்ளவர்கள் கொரோனா வைரஸ் 144 தடை உத்தரவால் வீட்டை விட்டு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இவர்களுக்கு கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வி குழுமத்தின் தலைவரும், தொழில் அதிபருமான குருதனசேகரன் தலைமையில் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலங்குடி வட்டாட்சியர் கலைமணி அகதிகளுக்கு அரிசி பைகளை வழங்கினார்.
கல்வி நிறுவன துணைத் தலைவர் சரவணன், முகாம் தலைவர் கமலநாதன், திருவ ரங்குளம் அகதிகள் முகாம் வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு, வல்லநாடு வருவாய் ஆய்வாளர் வெண்ணிலா, நிறுவனத் தாளாளர்கள் கன கராஜன், லியோ பிலிக்ஸ் லூர்துஸ், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொத்தம் உள்ள 447 குடும்பத்திற்கு சுமார் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கினர்.
பொருளாளர் வரதராஜ், செயலாளர் ஜெபமாலை குருஸ், துணைத் தலைவர் விஜயராஜா, உபத்தலைவர் ரவிச்சந்திரன், திருவரங்குளம் கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா, நிறுவன அறங்காவலர்கள் கான் அப்துல் பார்கான், கிருஷ்ணமூர்த்தி, சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 447 குடும்பம் வசித்து வருகிறது.
முகாமில் உள்ளவர்கள் கொரோனா வைரஸ் 144 தடை உத்தரவால் வீட்டை விட்டு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இவர்களுக்கு கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வி குழுமத்தின் தலைவரும், தொழில் அதிபருமான குருதனசேகரன் தலைமையில் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலங்குடி வட்டாட்சியர் கலைமணி அகதிகளுக்கு அரிசி பைகளை வழங்கினார்.
கல்வி நிறுவன துணைத் தலைவர் சரவணன், முகாம் தலைவர் கமலநாதன், திருவ ரங்குளம் அகதிகள் முகாம் வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு, வல்லநாடு வருவாய் ஆய்வாளர் வெண்ணிலா, நிறுவனத் தாளாளர்கள் கன கராஜன், லியோ பிலிக்ஸ் லூர்துஸ், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொத்தம் உள்ள 447 குடும்பத்திற்கு சுமார் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கினர்.
பொருளாளர் வரதராஜ், செயலாளர் ஜெபமாலை குருஸ், துணைத் தலைவர் விஜயராஜா, உபத்தலைவர் ரவிச்சந்திரன், திருவரங்குளம் கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா, நிறுவன அறங்காவலர்கள் கான் அப்துல் பார்கான், கிருஷ்ணமூர்த்தி, சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






