என் மலர்
செய்திகள்

வழக்கு பதிவு
கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவரை ஊர்வலமாக அழைத்துச் சென்ற 15 பேர் மீது வழக்குப்பதிவு
சீர்காழியில் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவரை ஊர்வலமாக அழைத்துச் சென்ற 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி தாடாளன் கோவில் சபாநாயகர் தெருவை சேர்ந்த ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லி சென்று ஊருக்கு திரும்பினார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு குணம் அடைந்ததை தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சீர்காழிக்கு வருகை தந்த அவருக்கு ஒரு சமூகத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்து ஊர்வலமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது.
தற்போது 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் தடையை மீறி கூட்டமாக சென்றதாக சீர்காழி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சீர்காழி போலீசார், தடையை மீறி ஊர்வலமாக சென்ற 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழி தாடாளன் கோவில் சபாநாயகர் தெருவை சேர்ந்த ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லி சென்று ஊருக்கு திரும்பினார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு குணம் அடைந்ததை தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சீர்காழிக்கு வருகை தந்த அவருக்கு ஒரு சமூகத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்து ஊர்வலமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது.
தற்போது 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் தடையை மீறி கூட்டமாக சென்றதாக சீர்காழி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சீர்காழி போலீசார், தடையை மீறி ஊர்வலமாக சென்ற 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






