என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    அறந்தாங்கியில் 144 தடை உத்தரவை மீறி குதிரை வண்டி பயிற்சி நடத்திய 5 பேர் மீது வழக்கு

    அறந்தாங்கியில் 144 தடையை மீறி குதிரை பயிற்சி அளித்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் குதிரை வண்டி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    அறந்தாங்கி:

    இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 144தடை உத்தரவு அமலில் உள்ளது, தடை உத்தரவை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அறந்தாங்கியை அடுத்த மருதங்குடி பகுதியில் 144 தடை உத்தரவை மீறி சிலர் குதிரைவண்டி பயிற்சி நடத்துவதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் வந்தது.

    தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன்தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது அறந்தாங்கி களப்பக்காடு பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் (18), ராகவன் (18), பரணி (19), ராதாகிருஷ்ணன் (21), மணிகண்டன் (20) ஆகியோர் குதிரை வண்டியில் குதிரைக்கு பயிற்சி அளித்து வந்தனர்.

    உடனே போலீசார் 144 தடையை மீறி குதிரை பயிற்சி அளித்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் குதிரை வண்டி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×