என் மலர்
செய்திகள்

வாணியம்பாடியில் விவசாயி திடீரென மயங்கி விழுந்து பலி
வாணியம்பாடி:
வாணியம்பாடியில் கொரோனா தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இன்று முதல் வாணியம்பாடி முழுவதும் 100 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள், காய்கறி, பழங்கள் என அனைத்தும் வீடு வீடாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செட்டியப்பனூரில் உள்ள திருமண மண்டபத்தில் தற்காலிக அரசு வேளாண் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் வாங்கி அதனை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான பிரித்து வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
ஆலங்காயம் அருகே உள்ள ஓமகுப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயி உமாபதி (வயது 48). இன்று காலை செட்டியப்பனூர் திருமண மண்டபத்திற்கு காய்கறிகள் கொண்டு வந்தார். அவற்றை அதிகாரிகளிடம் விற்பனை செய்துவிட்டு மண்டபம் முன்பு திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






