என் மலர்
செய்திகள்

கைது
நாட்டறம்பள்ளி அருகே போலி டாக்டர் கைது
நாட்டறம்பள்ளி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலி டாக்டர் ஒருவரை கைது செய்தனர்.
வாணியம்பாடி:
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் தலைமையில் போலீசார் நேற்று பச்சூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஊரடங்கு உத்தரவை மீறி அந்த வழியாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்ததில் அந்த நபர் ஊசி, மருந்து உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் பச்சூர் பாறையூர் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (40) என்பதும், இவர் மருத்துவம் படிக்காமல் அருகே உள்ள கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களுக்கு ஊசி போட்டு மருந்து, மாத்திரை வழங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






