search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்டம்
    X
    கோப்புப்டம்

    காஞ்சீபுரத்தில் மளிகை பொருள்கள் அதிக விலைக்கு விற்ற கடைக்கு சீல்

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையையொட்டி காஞ்சீபுரத்தில் மளிகை பொருள்களை அதிக விலைக்கு விற்ற கடைக்கு நகராட்சியினர் சீல் வைத்தனர்.
    காஞ்சீபுரம்:

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையையொட்டி, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில், மளிகை பொருட்கள் காய்கறிகள், எண்ணெய் ஆகியவை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்து இருந்தார். காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவில் உள்ள ஒரு மளிகை கடையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவை அதிக விலைக்கு விற்கப்படுவதாக காஞ்சீபுரம் நகராட்சிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி சுகாதாரத்துறையினரிடம் அந்த கடையில் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்ய உத்தரவிட்டார். ஆய்வில், அதிக விலைக்கு அந்த மளிகை கடைகாரர் விற்பனை செய்ததது தெரிந்தது. இதையொட்டி, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி, காஞ்சீபுரம் நகர் நல அலுவலர் டாக்டர் முத்து, மற்றும் சுகாதாரத்துறையினர் அந்த மளிகை கடைக்கு சென்றனர். அப்போது அதிக விலைக்கு விற்பனை செய்ததாக அந்த கடைக்கு நகராட்சியினர் ‘சீல்’ வைத்தனர். 
    Next Story
    ×