என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகை மாவட்டத்தில் அதிகமாக பரவ தொடங்கியுள்ள கொரோனா வைரஸ்
Byமாலை மலர்7 April 2020 9:14 AM GMT (Updated: 7 April 2020 9:14 AM GMT)
நாகை மாவட்டத்தை சேர்ந்த மேலும் 6 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாகை:
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு ஊருக்கு திரும்பி வந்த நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிலர் தாமாகவே முன்வந்து சுகாதாரத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவில் அனுமதிகக்கப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இவர்களில் நாகையில் 2 பேருக்கும், நாகூரில் 2 பேருக்கும், பொரவச்சேரியில் ஒருவருக்கும் என 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தநிலையில் இந்த மாவட்டத்தை சேர்ந்த மேலும் 6 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீர்காழி 6-வது வார்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், திருமருகல் ஒன்றிய பகுதியை சேர்ந்த 3 பேருக்கும், தரங்கம்பாடி தாலுகா, பொறையாறு அருகே திருக்களாச்சேரி ஊராட்சி கூத்தூர் பிலால்நகரை சேர்ந்த ஒருவருக்கும், நாகை முதலாவது கடற்கரை தெருவில் உள்ள அந்தோணியார்கோவில் தெருவை சேர்ந்த ஒருவருக்கும் என 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் வசித்த பகுதிகள் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளன. சீல் வைத்த பகுதிகளில் போஸ்டர் ஒட்டி உள்ளனர். அந்த பகுதியின் உள்ளே யாரும் செல்லக்கூடாது. அந்த பகுதியில் வசிப்பவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வேறு பகுதிக்கு சென்றார்களா? என்றும் அவர்களது உறவினர்கள் யாருக்கும் கொரோனா தொற்று உள்ளதா? என்பது குறித்தும் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு ஊருக்கு திரும்பி வந்த நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிலர் தாமாகவே முன்வந்து சுகாதாரத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவில் அனுமதிகக்கப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இவர்களில் நாகையில் 2 பேருக்கும், நாகூரில் 2 பேருக்கும், பொரவச்சேரியில் ஒருவருக்கும் என 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தநிலையில் இந்த மாவட்டத்தை சேர்ந்த மேலும் 6 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீர்காழி 6-வது வார்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், திருமருகல் ஒன்றிய பகுதியை சேர்ந்த 3 பேருக்கும், தரங்கம்பாடி தாலுகா, பொறையாறு அருகே திருக்களாச்சேரி ஊராட்சி கூத்தூர் பிலால்நகரை சேர்ந்த ஒருவருக்கும், நாகை முதலாவது கடற்கரை தெருவில் உள்ள அந்தோணியார்கோவில் தெருவை சேர்ந்த ஒருவருக்கும் என 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் வசித்த பகுதிகள் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளன. சீல் வைத்த பகுதிகளில் போஸ்டர் ஒட்டி உள்ளனர். அந்த பகுதியின் உள்ளே யாரும் செல்லக்கூடாது. அந்த பகுதியில் வசிப்பவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வேறு பகுதிக்கு சென்றார்களா? என்றும் அவர்களது உறவினர்கள் யாருக்கும் கொரோனா தொற்று உள்ளதா? என்பது குறித்தும் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X