search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் ஜான்லூயிஸ்
    X
    கலெக்டர் ஜான்லூயிஸ்

    மதுராந்தகம் அருகே கொரோனா பாதித்த பகுதியில் கலெக்டர் ஆய்வு

    மதுராந்தகம் அருகே கொரோனா வைரஸ் பாதித்த பகுதியில் கலெக்டர் ஜான்லூயிஸ் ஆய்வு செய்தார்.
    செங்கல்பட்டு:

    மதுராந்தகம் வட்டத்தில் கொரோனா வைரசால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பகுதியான பி.என். சாரி தெருவில் மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் ஆய்வு செய்தார்.

    அப்போது சாலையின் இரு புறமும் தடுப்புகள் அமைத்து வாகனங்கள், ஆட்கள் இவ்வழியே செல்ல அனுமதிக்கக் கூடாது, அடிக்கடி கிருமி நாசினி தெளிக்க வேண்டும். போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி லட்சுமி பிரியா உடன் இருந்தனர்.
    Next Story
    ×