என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெண் டாக்டருக்கு கொரோனா அறிகுறி- ஈரோடு ரெயில்வே ஆஸ்பத்திரி மூடல்
ஈரோடு:
ஈரோடு ரெயில்வே காலனியில் ரெயில்வே மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டது.
அந்த பெண் டாக்டர் ஈரோடு ரெயில்வே ஆஸ்பத்திரியில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன் பணி மாறுதல் பெற்று கோவை போத்தனூர் ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு சென்று உள்ளார். அவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ரெயில்வே காலனியில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரியில் ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மேலும் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த பிற டாக்டர்கள் நர்சுகள் மற்றும் பிற பணியாளர்கள் என 32 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் அவர்களின் குடும்பத்தினரையும் கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. ரெயில்வே ஆஸ்பத்திரி முழுமையாக மூடப்பட்டு உள்ளது. பெண் டாக்டருக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் சிகிச்சை அளித்தவர்கள் விவரம், அவர் சென்று வந்த இடங்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
ஈரோட்டில் பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்