search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேலூரில் சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் குண்டர் சட்டத்தில் கைது

    வேலூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    வேலூர்:

    வேலூர் கமலாட்சிபுரத்தை சேர்ந்தவர் சம்பத் வயது 52. இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத்தை கைது செய்தனர். சம்பத் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பரிந்துரை செய்தார்.

    அதன்படி  நடவடிக்கை எடுக்க கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். இதனையடுத்து சம்பத் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இதேபோல் பேரணாம்பட்டு  கள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 43) தொடர்ந்து சாராய விற்பனை செய்து வந்தார். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×