search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    கோபி அருகே பாறை மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி

    கோபி அருகே பாறை மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.

    கோபி:

    கோபி அருகே உள்ள உக்கரம் தக்கார குட்டை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சதிஷ் (20). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சதிஷ் தனது நண்பரும் கல்லூரி மாணவருமான சிவக்குமாருடன் (21) மோட்டார் சைக்கிளில் புளியம்பட்டியில் இருந்து வந்தார். மோட்டார் சைக்கிளை சதிஷ் ஓட்ட சிவக்குமார் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

    வண்டிப்பாளையம் மதிப்பானூர் துரையன் தோட்டம் பகுதியில் வளையில் மோட்டார் சைக்கிள் திரும்பிய போது திடீரென நிலை தடுமாறி ரோடு ஓரம் இருந்த பாறையில் மோதியது.

    இதில் சதிஷ், சிவக்குமார் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சத்திமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் சதிஷ் பரிதாபமாக இறந்தார்.

    சிவக்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×