என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோபி அருகே பாறை மீது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி
கோபி:
கோபி அருகே உள்ள உக்கரம் தக்கார குட்டை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சதிஷ் (20). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சதிஷ் தனது நண்பரும் கல்லூரி மாணவருமான சிவக்குமாருடன் (21) மோட்டார் சைக்கிளில் புளியம்பட்டியில் இருந்து வந்தார். மோட்டார் சைக்கிளை சதிஷ் ஓட்ட சிவக்குமார் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.
வண்டிப்பாளையம் மதிப்பானூர் துரையன் தோட்டம் பகுதியில் வளையில் மோட்டார் சைக்கிள் திரும்பிய போது திடீரென நிலை தடுமாறி ரோடு ஓரம் இருந்த பாறையில் மோதியது.
இதில் சதிஷ், சிவக்குமார் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சத்திமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் சதிஷ் பரிதாபமாக இறந்தார்.
சிவக்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்