என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகூர் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்16 March 2020 12:52 PM GMT (Updated: 16 March 2020 12:52 PM GMT)
பாகூர் அருகே வெடிவிபத்தில் தாய் இறந்த சோகத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்;
பாகூர் அருகே கரையாம் புத்தூர் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் விக்ரமன், விவசாயி. இவரது மகள் சுலோசனா (வயது30). விக்ரமனின் மனைவி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கரையாம்புத்தூரில் நடந்த பட்டாசு தொழிற்சாலை விபத்தில் இறந்து போனார்.
தாய் இறந்தது முதல் சுலோசனா மனவருத்தத்துடன் இருந்து வந்தார். மேலும் சுலோசனாவுக்கு அடிக்கடி உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இதனால் சுலோசனா விரக்தியுடன் இருந்து வந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
ஆனாலும் சுலோசனா சோகத்தில் இருந்து மீளாமல் துயரத்துடன் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு சுலோசனாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் கரிக்காலம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுலோசனா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கரையாம்புத்தூர் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X