என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவர சீரமைப்பு பணிகள்
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசனும், செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் 2-ம் சீசனும் ஆரம்பமாகும்.
இந்நிலையில் கோடை காலங்களில் பள்ளி விடுமுறையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். இதனால் அவர்களை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தொடர்ந்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி உள்பட பல கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன.
இந்த ஆண்டின் மலர் கண்காட்சி சிறப்பு அம்சமாக, சைக்லமன், சினரேரியா, ஜெரோனியம், கிலக்ஸ்சீனியா, ரனுன்குலஸ் உள்ளிட்ட புதிய ரகம் மற்றும் ஆர்னமென்டல் கேல், கேலா லில்லி, ஓரியன்டல் லில்லி, மைமுலஸ், ஸ்கேபியோசா, கலிபோர்னியா பாப்பி உள்ளிட்ட 400 வகை விதைகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து கொண்டுவரப்படுகிறது. சீசனில் சுற்றுலா பயணிகளின் வருகையையொட்டி தற்போது ஒரு கட்டமாக தாவிரவியல் பூங்காவில் உள்ள குளங்கள் தூர்வாரும் பணி நிறைவடைந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்