search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி பூங்கா
    X
    ஊட்டி பூங்கா

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவர சீரமைப்பு பணிகள்

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையையொட்டி தற்போது ஒரு கட்டமாக தாவரவியல் பூங்காவில் உள்ள குளங்கள் தூர்வாரும் பணி நிறைவடைந்துள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசனும், செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் 2-ம் சீசனும் ஆரம்பமாகும்.

    இந்நிலையில் கோடை காலங்களில் பள்ளி விடுமுறையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். இதனால் அவர்களை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தொடர்ந்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி உள்பட பல கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன.

    இந்த ஆண்டின் மலர் கண்காட்சி சிறப்பு அம்சமாக, சைக்லமன், சினரேரியா, ஜெரோனியம், கிலக்ஸ்சீனியா, ரனுன்குலஸ் உள்ளிட்ட புதிய ரகம் மற்றும் ஆர்னமென்டல் கேல், கேலா லில்லி, ஓரியன்டல் லில்லி, மைமுலஸ், ஸ்கேபியோசா, கலிபோர்னியா பாப்பி உள்ளிட்ட 400 வகை விதைகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து கொண்டுவரப்படுகிறது. சீசனில் சுற்றுலா பயணிகளின் வருகையையொட்டி தற்போது ஒரு கட்டமாக தாவிரவியல் பூங்காவில் உள்ள குளங்கள் தூர்வாரும் பணி நிறைவடைந்துள்ளது.

    Next Story
    ×