என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ் எதிரொலி: அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
Byமாலை மலர்12 March 2020 9:46 AM GMT (Updated: 12 March 2020 9:46 AM GMT)
சிதம்பரம் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஏசி பஸ்கள், நீண்ட தூரம் செல்லும் பஸ்கள், வெளிமாநிலம் செல்லும் பஸ்கள் மற்றும் உள்ளூர் பஸ்கள் ஆகியவற்றிற்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்தது.
சிதம்பரம்:
சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் இன்று உலக மக்களையே அச்சுறுத்தி உள்ளது.
தற்போது சீனாவில் கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு 3,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தாக்குதல் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கிருமிகள் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை ஆலோசனையின் படி அனைத்து போக்குவரத்துக்கழக பணிமனைகளில் கிருமிநாசினி தெளித்து பஸ்களை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர் மண்டலம் சிதம்பரம் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஏசி பஸ்கள், நீண்ட தூரம் செல்லும் பஸ்கள், வெளிமாநிலம் செல்லும் பஸ்கள் மற்றும் உள்ளூர் பஸ்கள் ஆகியவற்றிற்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்தது. ஊழியர்கள் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் இன்று உலக மக்களையே அச்சுறுத்தி உள்ளது.
தற்போது சீனாவில் கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு 3,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தாக்குதல் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கிருமிகள் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை ஆலோசனையின் படி அனைத்து போக்குவரத்துக்கழக பணிமனைகளில் கிருமிநாசினி தெளித்து பஸ்களை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர் மண்டலம் சிதம்பரம் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஏசி பஸ்கள், நீண்ட தூரம் செல்லும் பஸ்கள், வெளிமாநிலம் செல்லும் பஸ்கள் மற்றும் உள்ளூர் பஸ்கள் ஆகியவற்றிற்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்தது. ஊழியர்கள் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X