என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அந்தியூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்பு - தென்னையை சேதப்படுத்திய ஒற்றை யானை
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்தப் பகுதி மலைப் பகுதியின் அடிவாரப் பகுதியாக உள்ளதால் யானை மற்றும் மான் உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது.
மேலும் தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் உள்ள செக்போஸ்ட் அருகே விநாயகர் கோயில் எதிரில் உள்ள சாலையில் ஒற்றை யானை ஒன்று நடந்து வந்து விளை நிலங்களுக்குள் புகுந்து உள்ளது. இதனை பார்த்த அந்தப் பகுதி தோட்டத்து உரிமையாளர்கள் அந்த யானையை விரட்டினர்.
இதனையடுத்து மீண்டும் வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட் அருகே ராஜ்குமார் என்பவரது தோட்டத்தில் புகுந்து வாழை மற்றும் கரும்பு, தென்னை ஆகியவற்றை மிதித்து சேதப்படுத்தி உள்ளது. இதனை பார்த்த தோட்டத்து உரிமையாளர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் யானையை விரட்டி விட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்