என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பறவை காய்ச்சல் எதிரொலி- கேரளாவில் இருந்து கோழிகள் ஏற்றி வர தடை
Byமாலை மலர்11 March 2020 10:10 AM GMT (Updated: 11 March 2020 10:10 AM GMT)
கேரளாவில் இருந்து கறிக்கோழி, முட்டை, கோழி தீவனங்கள் உள்ளிட்ட பொருட்களை நீலகிரி மாவட்டத்திற்குள்ள கொண்டு வர அம்மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் தற்போது பறவைக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனையொட்டி அருகே உள்ள நீலகிரி மாவட்டத்திற்கு பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
கேரளாவில் இருந்து வரும் அனைத்தும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.
மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையடுத்து கேரளாவில் இருந்து கறிக்கோழி, முட்டை, கோழி தீவனங்கள் உள்ளிட்ட பொருட்களை நீலகிரி மாவட்டத்திற்குள்ள கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது. எனவே சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கோழி தீவனம் ஏற்றி வரும் லாரிகளை மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டாம். மேலும் பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் தற்போது பறவைக்காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனையொட்டி அருகே உள்ள நீலகிரி மாவட்டத்திற்கு பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
கேரளாவில் இருந்து வரும் அனைத்தும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.
மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையடுத்து கேரளாவில் இருந்து கறிக்கோழி, முட்டை, கோழி தீவனங்கள் உள்ளிட்ட பொருட்களை நீலகிரி மாவட்டத்திற்குள்ள கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது. எனவே சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கோழி தீவனம் ஏற்றி வரும் லாரிகளை மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டாம். மேலும் பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X