search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

    ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கருணாகரச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல் (வயது55). விவசாயி. இவர் அதே பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை விவசாய வேலைகளை கவனிக்க வயல் வெளிக்கு சென்றார். அப்போது மின்சார ஒயர் அறுந்து கீழே விழுந்து கிடந்தது. அதை கவனிக்காமல் ஞானவேல் மின்சார வயரை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ஞானவேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    Next Story
    ×