என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
சாலை விபத்து
பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
By
மாலை மலர்29 Feb 2020 6:13 PM GMT (Updated: 29 Feb 2020 6:13 PM GMT)

பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள பூவாணிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவருடைய மனைவி ஆதிலட்சுமி(வயது 45). இவர்களது மகன் கவியரசன். இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர். கொள்ளுக்காரன்குட்டையில் தனியார் பள்ளி அருகில் உள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி, இறங்கியபோது ஆதிலட்சுமி தவறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் படுகாயமடைந்த ஆதிலட்சுமி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து கணவரும், அவரது மகனும் கதறி அழுதனர். இது பற்றி தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீசார் விரைந்து வந்து ஆதிலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி அருகே உள்ள பூவாணிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவருடைய மனைவி ஆதிலட்சுமி(வயது 45). இவர்களது மகன் கவியரசன். இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர். கொள்ளுக்காரன்குட்டையில் தனியார் பள்ளி அருகில் உள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி, இறங்கியபோது ஆதிலட்சுமி தவறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் படுகாயமடைந்த ஆதிலட்சுமி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து கணவரும், அவரது மகனும் கதறி அழுதனர். இது பற்றி தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீசார் விரைந்து வந்து ஆதிலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
