என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பந்தலூர் அருகே ஓட்டலில் பதுக்கி மதுவிற்ற கடை உரிமையாளர் கைது
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே, நெலாக்கோட்டை பஜாரில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது.
தற்போது அந்த கடை மூடப்பட்டதை அடுத்து போலீஸ் நிலையத்தை ஒட்டிய பகுதியில், கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்த பகுதியில் ஒரு ஆட்டோவில் விற்பனைக்காக மதுபாட்டில்களை ஒருவர் இறக்கி கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சித்திரகனி (வயது52) என்பதும், அந்த பகுதியில் ஒட்டல் வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது.
மேலும் இவர் நெலாக்கோட்டையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து ஓட்டலில் மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், ஆட்டோ மற்றும் ஓட்டலில் வைத்திருந்த, 170 வோட்டர் பாட்டில்கள், 21 பீர் பாட்டில்கள் என மொத்தம் 191 சரக்கு பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்