search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ஒரகடத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

    ஒரகடத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் அதே இடத்தில் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    படப்பை:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா உண்ணமந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் இவருடைய மகன் விஷ்ணுவரதன் (வயது 27). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் சிங்கப்பெருமாள் கோவில் செல்லும் சாலையில் ஒரகடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் லிப்ட் கேட்டு மோட்டார் சைக்கிளில் விஷ்ணுவரதன் ஏறியுள்ளார்.

    மோட்டார் சைக்கிள் வடகால் பஸ் நிறுத்தம் அருகே வரும்போது சாலையில் மாடு குறுக்கே சென்றதால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மாட்டின் மீது மோதாமல இருக்க பிரேக் பிடித்தார். அப்போது அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

    அப்போது அதே பகுதியில் பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி விஷ்னுவரதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை செய்து காயம் அடைந்த நபரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விஷ்ணுவரதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தை சேர்ந்த நாகசுதன் ( 25) என்பது தெரியவந்தது.
    Next Story
    ×