search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீயில் கருகி பலியான நந்தினி
    X
    தீயில் கருகி பலியான நந்தினி

    ஈரோடு அருகே சிலிண்டர் வெடித்து இளம்பெண் கருகி பலி - காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம்

    ஈரோடு அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் வெடித்து இளம்பெண் கருகி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு எல்லப்பாளையம் கொளத்து பாளையம் பேத்தாங்காடு வீதி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28) துப்புரவு தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (26) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இன்று காலை இவர்களின் குடிசை வீட்டில் நந்தினி இருந்தார். மகன்கள் பள்ளிக்கு சென்று விட்டனர். கணவர் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த குடிசை வீட்டில் திடீரென தீ பிடித்தது. தொடர்ந்து வீட்டில் இருந்த சிலிண்டரும் டமார் என்ற சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து உடனடியாக ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.வீட்டில் தீயில் சிக்கிய மனைவியை மீட்க கணவர் ரமேஷ் முயன்றபோது அவரது முகம் மற்றும் உடலிலும் தீ பிடித்தது. வீட்டின் உள்ளே நந்தினி தீயில் உடல் கருகி கரிகட்டையாக பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

    பிறகு அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு ஈரோடு மேற்கு வருவாய் ஆய்வாளர் கயல்விழி, கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுமாதா ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×