search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    அந்தியூர் அருகே விபத்து- சூப்பர்வைசர் பலி

    அந்தியூர் அருகே விபத்தில் சூப்பர்வைசர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆப்பக்கூடல்:

    அந்தியூர் திருநீலகண்ட நீதியை சேர்ந்தவர் ராஜா (வயது 29). இவர் தனியார் நூல் மில்லில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.

    ராஜா, நேற்று இரவு சுமார்12:30 மணியளவில் ஆப்பக்கூடல் அடுத்த கருவில் வாடி புதூரில் தனது நண்பரை பைக்கில் வந்து இறக்கி விட்டுவிட்டு திரும்பி அந்தியூர் நோக்கி வந்தார்.

    அப்போது ஆப்பக்கூடலில் இருந்து அத்தாணி நோக்கி வந்த ஈச்சர் லாரியை சவுண்டப்பூர் சொசைட்டி வீதியை சேர்ந்த பாலரமேஷ் என்பவர் ஓட்டி வந்த போது சென்னிமலை கவுண்டன் புதூர் அருகே இருவரும் வந்தபோது எதிரே எதிரே மோதிக்கொண்டனர்.

    இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இவரது உடல் அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஈச்சர் லாரி ஓட்டி வந்த பாலரமேஷ் ஆப்பக்கூடல் போலீசில் சரணடைந்தார்.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×