search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கழிவுநீர் கலந்த குடிநீரை காட்டும் பெண்.
    X
    கழிவுநீர் கலந்த குடிநீரை காட்டும் பெண்.

    ஆதம்பாக்கத்தில் குடிநீரில் கலந்துவரும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி

    ஆதம்பாக்கத்தில் கடந்த சில நாட்களாக வீடுகளுக்கு வரும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணாபுரம் 2-வது குறுக்கு தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக வீடுகளுக்கு வரும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகின்றன.

    துர்நாற்றத்துடன் வரும் இந்த நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் கூடுதல் விலை கொடுத்து குடி தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கழிவு நீர் கலந்த குடிநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் மெட்ரோ வாட்டர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×