என் மலர்
செய்திகள்

எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்
பைக்கில் வந்தவரிடம் பெட்ரோல் கேட்டு தகராறு - கல்லூரி மாணவரின் மோட்டார் சைக்கிள் எரிப்பு
மாமல்லபுரம் அருகே பைக்கில் வந்தவரிடம் பெட்ரோல் கேட்டு தகராறில் ஈடுபட்ட கல்லூரி மாணவரின் மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரம்:
கானாத்தூரை சேர்ந்தவர் தனசேகரன், சமையல் காண்டிராக்டர். நேற்று மாலை அவர் கூவத்தூர் அடுத்த கோட்டைபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் தள்ளிக்கொண்டு வந்த 2 வாலிபர்கள் தனசேகரனை நிறுத்தினர்.
அவர்கள் தனசேகரனிடம் ‘நாங்கள் வந்த பைக் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது. வண்டியில் உள்ள பெட்ரோலை கொடுக்க வேண்டும் அல்லது பங்க் எங்கே உள்ளது என்று உடன் வந்து காட்ட வேண்டும்’ என்று மிரட்டும் வகையில் கூறினர்.
இதனால் தனசேகரனுக்கும் வாலிபர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர்.
உடனே 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
ஆனாலும் ஆத்திரம் அடங்காத தனசேகரன் அந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தார். இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.
தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தன சேகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தினேஷ், சூர்யா என்பது தெரிந்தது.
தினேஷ் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். எரிக்கப்பட்டது அவரது மோட்டார் சைக்கிள் ஆகும்.
இதுபற்றி இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் செய்தனர். போலீசார் கல்லூரி மாணவர் தினேஷ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
கானாத்தூரை சேர்ந்தவர் தனசேகரன், சமையல் காண்டிராக்டர். நேற்று மாலை அவர் கூவத்தூர் அடுத்த கோட்டைபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் தள்ளிக்கொண்டு வந்த 2 வாலிபர்கள் தனசேகரனை நிறுத்தினர்.
அவர்கள் தனசேகரனிடம் ‘நாங்கள் வந்த பைக் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது. வண்டியில் உள்ள பெட்ரோலை கொடுக்க வேண்டும் அல்லது பங்க் எங்கே உள்ளது என்று உடன் வந்து காட்ட வேண்டும்’ என்று மிரட்டும் வகையில் கூறினர்.
இதனால் தனசேகரனுக்கும் வாலிபர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர்.
உடனே 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
ஆனாலும் ஆத்திரம் அடங்காத தனசேகரன் அந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தார். இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.
தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தன சேகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தினேஷ், சூர்யா என்பது தெரிந்தது.
தினேஷ் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். எரிக்கப்பட்டது அவரது மோட்டார் சைக்கிள் ஆகும்.
இதுபற்றி இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் செய்தனர். போலீசார் கல்லூரி மாணவர் தினேஷ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
Next Story






