என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பண்ணாரி அருகே ரோட்டில் நடமாடிய கரடி - வாகன ஓட்டிகள் உஷார்

    சத்தியமங்கலம் அருகே ரோட்டில் கரடி நடமாட்டம் இருப்பதால் அதன் அருகே யாரும் சென்று விட வேண்டாம் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் இருந்து அடர்ந்த வனப்பகுதி தொடங்குகிறது.

    பண்ணாரி அருகே குய்யனூரில் ஒரு சிறிய பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் தினமும் காலை, மாலை என எப்போதும் ஒரு கரடி நடமாடி கொண்டிருக்கிறது.

    இந்த கரடி ரோட்டிலும் நடமாடுவதால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் 4 சக்கர மற்றும் 2 சக்கர வாகன ஓட்டிகள் உஷாராக கவனமாக செல்லும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    இதே போல் அந்த பகுதியில் ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்களும் கவனமாக இருக்கும் படி கேட்டு கொண்டுள்ளனர்.

    வன விலங்குகளில் கொடிய விலங்கு கரடி. ஆகவே கரடி நடமாடினால் அதன் அருகே யாரும் சென்று விட வேண்டாம் எனவும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.

    குய்யனூர் பகுதியில் முன்பு குடியிருப்பு பகுதிக்குள் கரடி புகுந்து பொதுமக்களை தாக்கி உள்ளதை அப்பகுதி மக்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

    ஒரு விவசாயியை ஒரு கரடி மிகவும் கொடூரமாகவும் தாக்கியது. இந்த நிலையில் குய்யனூர் பாலம் அருகே பாலத்தின் கீழ் தற்போது கரடி நடமாட்டத்தால் குய்யனூர் பகுதி மக்கள் கலக்கத்துடன் உள்ளனர்.
    Next Story
    ×