என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காட்பாடியில் ஷோரூமில் ரூ.2 லட்சம், 7 பவுன் நகை கொள்ளை
காட்பாடி:
காட்பாடி சித்தூர் சாலையில் சத்யா வீட்டு உபயோக பொருட்கள் ஷோரூம் உள்ளது. நேற்று இரவு அதன் 3-வது மாடிக்கு சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த கதவின் தகட்டை நீக்கி உள்ளே நுழைந்து பின்னர் ஷட்டர் லாக்கை கடப்பாரையால் நீக்கியுள்ளனர்.
ஷோரூமுக்குள் இறங்கி ஷோரூம் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம், விலை உயர்ந்த 6 செல்போன்கள் மற்றும் ஊழியர் ஒருவர் வைத்திருந்த 7½ பவுன் நகை ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றனர்.
இதேபோல் அருகில் உள்ள குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூமுக்குள் நுழைந்துள்ளனர்.
அங்கு கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.3500 எடுத்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து ஷோரூம் நிர்வாகி விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு காட்பாடி டி.எஸ்.பி. துரைப்பாண்டி மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
ஷோரூமில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்