என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
சீனாவில் இருந்து ஊட்டி வந்த 5 மருத்துவ மாணவர்கள் உள்பட 7 பேர் தீவிர கண்காணிப்பு
சீனாவில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வந்துள்ள 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேர் வீடுகளில் தனி அறையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டி:
சீனாவில் கொரோனா வைரசால் பலர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பாதிப்புக்குள்ளாகி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் இருந்து இந்தியாவை சேர்ந்த பலர் திரும்பி வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஊட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவில் இதுவரை 490 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் சீனாவில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வீடுகளில் தனி அறையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைக் கண்காணிப்பதற்காக 5 பிரத்யேக மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக மாவட்ட, மாநில எல்லைகளில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பிரத்யேக வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சீனாவில் கொரோனா வைரசால் பலர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பாதிப்புக்குள்ளாகி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் இருந்து இந்தியாவை சேர்ந்த பலர் திரும்பி வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஊட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவில் இதுவரை 490 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் சீனாவில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வீடுகளில் தனி அறையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைக் கண்காணிப்பதற்காக 5 பிரத்யேக மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக மாவட்ட, மாநில எல்லைகளில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பிரத்யேக வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






