என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஏலகிரிமலை அடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம்
ஜோலார்பேட்டை:
ஏலகிரி மலை அடிவாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. விவசாயிகள் ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள மண்டலவாடி காமராஜபுரத்தை சேர்ந்த விவசாயி முரளி என்பவருக்கு சொந்தமான ஆடுகளை விவசாய நிலத்தில் கட்டி வைத்திருந்தார்.
நேற்று இரவு சிறுத்தை ஒன்று அந்த பகுதியில் புகுந்தது. அது கட்டப்பட்டிருந்த ஆடுகளை கடித்தது. இதில் 2 ஆடுகள் இறந்தன. 4 ஆடுகள் படுகாயமடைந்தன. ஒரு ஆட்டை சிறுத்தை தின்று விட்டு சென்றுள்ளது.
இன்று காலை சிறுத்தை கடித்து ஆடு பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விவசாயிகள் சென்று பார்த்தபோது சிறுத்தை கால்தடம் இருந்ததது.
இன்று காலை மண்டலவாடி வனப்பகுதியில் சிறுத்தை சுற்றிதிரிந்தது. அதனை பொதுமக்கள் பட்டாசு வெடித்து விரட்டினர்.
இது தொடர்பாக ஏலகிரி மலை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்