search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரம்
    X
    மாமல்லபுரம்

    மாமல்லபுரத்தில் சிற்ப கலையுடன் புதிய பஸ் நிலையம்

    மாமல்லபுரத்தில் சிற்ப கலை நயத்துடன் கூடிய நவீன பஸ் நிலையம் அமைய உள்ளது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கருகாத்தம்மன் கோவில் அருகே கிழக்கு கடற்கரை சாலை இணைப்புடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    அந்த இடத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் ஆய்வு செய்தார். பின்னர் சம்பந்தபட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நேற்று முதல் கட்ட ஆய்வு பணி தொடங்கியது.

    இந்த புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லும் ஒருவழி பாதை, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மற்ற பயணிகளால் இடையூறு இல்லாமல் இருக்க குளிர்சாதன ஓய்வு அறை, கேமரா கண்காணிப்புடன் கூடிய லக்கேஜ் அறை, வை-பை இணையதள வசதிகள், வெளிநாட்டு கழிப்பறைகள்.

    மேலும் சிற்பக்கலை ஆர்சுகள், புராதன சின்னம் பகுதிகளின் வரைபட கல்வெட்டுகள், பேருந்து நிலையம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் இருக்க நவீன சுழல் கேமராக்கள் வசதியுடன் கட்டுப்பாட்டு அறை, மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற சுற்றுலா வழிகாட்டிகள் மட்டும் அமர்ந்திருக்க வழிகாட்டிகள் அறை இது போன்ற சகல வசதிகள் அமைய உள்ளது.

    சிற்ப கலை நயத்துடன் நவீன பஸ் நிலையமாக இது அமைய இருக்கிறது.

    Next Story
    ×