என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    கல்பாக்கத்தில் பஸ்-வேன் மோதல்: வாலிபர் பலி

    கல்பாக்கத்தில் பஸ்-வேன் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த புதுபட்டினம் பகுதியை சேர்ந்த சாதிக் (வயது 19). அப்பகுதி எலக்ட்ரிக் கடையில் மிக்சி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறான்.

    நேற்று நள்ளிரவில் புதுப்பட்டினத்தில் நடந்த கனியான் கூத்து கலை நிகழ்ச்சியை பார்த்து விட்டு இன்று அதிகாலை 3.30 மணிக்கு கல்பாக்கம் எல்.ஆர் குப்பம் பைபாஸ் ரோடு அருகே உள்ள டீக்கடைக்கு சைக்கிளில் சென்றார். அப்போது சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ்சும் கடலூருக்கு சென்ற சரக்கு வேனும் நேருக்குநேர் மோதியது.

    இதில் நிலை தடுமாறிய சாதிக் பஸ்வேன் இரண்டுக்கும் நடுவே சிக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பஸ்வேன் டிரைவர் இருவரும் கால்கள் உடைந்த நிலையில் பலத்த காயம் அடைந்தனர்.

    அவர்கள் இருவரையும் கல்பாக்கம் போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×