என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெருந்துறையில் இன்று சாலை விபத்தில் தச்சு தொழிலாளி பலி
பெருந்துறை:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 35) தச்சு தொழிலாளி. இவர் ஈரோடு மாவட்டம் கங்காபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
அதை போல் கணேசன் தனது மோட்டார் சைக்கிளில் தாய் வீட்டுக்கு வந்தார். இன்று காலை மீண்டும் தாய் வீட்டிலிருந்து பல்லடம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கிளம்பினார். பெருந்துறை அடுத்த சோளிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக கணேசன் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கணேசனை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்