என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடலூர் அருகே சாலையை கடந்து சென்ற புலிகள் - பொதுமக்கள் அச்சம்
Byமாலை மலர்20 Jan 2020 11:24 AM GMT (Updated: 20 Jan 2020 11:24 AM GMT)
கூடலூர் அருகே சாலையை கடந்து செல்லும் புலியால் பொதுமக்கள் அச்சமடைந்ததையடுத்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர்-கோழிக்கோடு சாலையில் மரப்பாலம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தினமும் அதிகாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்றனர். அப்போது அவர்கள் மரப்பாலம் புதிய டிரான்ஸ்பார்மர் அருகே சென்றபோது அங்குள்ள ஒரு தோட்டத்திற்குள் இருந்து 2 புலிகள் வெளியில் வந்தன. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தோட்டத்தில் இருந்து வெளியில் வந்த புலிகள் அந்த பகுதியில் உள்ள கூடலூர்- கோழிக்கோடு சாலையை கடந்து மறு பகுதிக்கு சென்றது. இதுகுறித்து அந்த நபர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் புலி நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாகவே இந்த பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி புலிகள் சாலையை கடக்கும் சம்பவம் நடந்துள்ளது. இதனை ஏற்கனவே சிலர் பார்த்துள்ளனர்.
இதேபோல் 10-வது மைல் பகுதியிலும் இதே புலிகள் அதிகாலையில் சாலையை கடந்து செல்வதையும் அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இந்த புலிகள் குண்டம்புழா வனப்பகுதியிலிருந்து வெளியேறி இங்கு வந்து இருக்க வாய்ப்புள்ளது.
எனவே, வனத்துறையினர் தொடர்ந்து புலி நடமாட்டத்தை கண்காணித்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர்-கோழிக்கோடு சாலையில் மரப்பாலம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தினமும் அதிகாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்றனர். அப்போது அவர்கள் மரப்பாலம் புதிய டிரான்ஸ்பார்மர் அருகே சென்றபோது அங்குள்ள ஒரு தோட்டத்திற்குள் இருந்து 2 புலிகள் வெளியில் வந்தன. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தோட்டத்தில் இருந்து வெளியில் வந்த புலிகள் அந்த பகுதியில் உள்ள கூடலூர்- கோழிக்கோடு சாலையை கடந்து மறு பகுதிக்கு சென்றது. இதுகுறித்து அந்த நபர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் புலி நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாகவே இந்த பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி புலிகள் சாலையை கடக்கும் சம்பவம் நடந்துள்ளது. இதனை ஏற்கனவே சிலர் பார்த்துள்ளனர்.
இதேபோல் 10-வது மைல் பகுதியிலும் இதே புலிகள் அதிகாலையில் சாலையை கடந்து செல்வதையும் அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இந்த புலிகள் குண்டம்புழா வனப்பகுதியிலிருந்து வெளியேறி இங்கு வந்து இருக்க வாய்ப்புள்ளது.
எனவே, வனத்துறையினர் தொடர்ந்து புலி நடமாட்டத்தை கண்காணித்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X