search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ஊதியூர் அருகே பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்தது- 2 பேர் பலி

    ஊதியூர் அருகே பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் மொடக்குறிச்சி முருக பக்தர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஈரோடு:

    தைப்பூசத்தையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

    காங்கயம் அருகே ஊதியூர் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் பக்தர்கள் ரோட்டோரம் பழனிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து வந்த ஒரு கார் திடீரென நிலை தடுமாறி நடந்து சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து அவர்கள் மீது மோதியது. இதில் மொடக்குறிச்சி அடுத்த ஆலாங்காட்டு வலசை சேர்ந்த விவசாயி குமார் (வயது 48), சேலம் பொன்னம்மா பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயப்பிரகாஷ் (19) ஆகிய இருவரும் பலியானார்கள்.

    மேலும் இந்த விபத்தில் பள்ளிபாளையத்தை சேர்ந்த குருநாதன் (60), மாரி (48) உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரி சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த விபத்து தொடர்பாக ஊதியூர் போலீசார் வழக்குபதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள். காரை டிரைவர் சென்னிமலையை சேர்ந்த அசோக்குமார் கைது செய்யப்பட்டார்.

    Next Story
    ×