என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊசூர் அருகே மனைவி தற்கொலை முயற்சி - கணவர் தூக்கிட்டு தற்கொலை
Byமாலை மலர்11 Jan 2020 11:14 AM GMT (Updated: 11 Jan 2020 11:14 AM GMT)
குடும்பத்தகராறில் விரக்தியடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மருத்துவமனையில் சென்று பார்த்துவிட்டு திரும்பிய கணவர், தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த வீராரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(32)வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் ராஜேஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் தம்பதியருக்கு இடையே அடிக்கடி தகராறு எற்பட்டு வந்தது. இதேபோல் கடந்த 7- ந் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த பிரியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மருத்துவமனைக்கு வந்த போலீசார் இது பற்றி பிரியாவிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது மனைவியை பாத்துவிட்டு வீட்டுக்கு சென்ற ராஜேஷ் தீடீரென தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து ராஜேஷ் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த வீராரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(32)வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் ராஜேஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் தம்பதியருக்கு இடையே அடிக்கடி தகராறு எற்பட்டு வந்தது. இதேபோல் கடந்த 7- ந் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த பிரியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மருத்துவமனைக்கு வந்த போலீசார் இது பற்றி பிரியாவிடம் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது மனைவியை பாத்துவிட்டு வீட்டுக்கு சென்ற ராஜேஷ் தீடீரென தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து ராஜேஷ் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X