என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குடிநீர் டிராக்டர் மோதி மின்கம்பம் சாய்ந்தது- மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் விடிய விடிய தவிப்பு
வேலூர்:
வேலூர் ஆற்காடு சாலையில் இருந்து சைதாப்பேட்டை பகுதிகளுக்கு டிராக்டர்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
நேற்றிரவு ஆற்காடு சாலையில் இருந்து சுப்பராம அய்யர் தெரு வழியாக சைதாப்பேட்டைக்கு தண்ணீர் டிராக்டர் ஒன்று சென்றது சுப்பராம அய்யர் தெருவில் உள்ள குறுகலான பகுதியில் திரும்பியபோது அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது.
இதில் மின் ஒயர்கள் ஒன்றுக்கொன்று உரசி தீப்பொறிகள் பறந்தன. 100-க்கும்மேற்பட்ட வீடுகளில் பீஸ் போனது. மின்கம்பிகள் ஒரே நேரத்தில் தரையில் விழுந்ததால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிகப்பட்டது. ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின்சாரத்தை தடை செய்தனர். இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் விடிய விடிய தவித்தனர்.
இன்று காலையில் மீட்புப் பணிகள் நடந்தது. மின் ஒயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சுப்பராம அய்யர் தெருவில் குறுகலான வளைவுகள் இருப்பதால் இதன் வழியாக டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்