search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    மூலப்பாளையம், சின்னியம்பாளையம் ஈரோடு புறநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

    மூலப்பாளையம், சின்னியம்பாளையம் ஈரோடு புறநகர் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை கீழ்கண்ட ஈரோடு புறநகர் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டு வலசு, பொட்டிநாய்க்கன் வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்த நாய்க்கன் பாளையம்,

    நஞ்சை ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆண்டக்கேத்தாம் பாளையம், ஆணைக்கல்பாளையம், ஈ.பி.நகர், கே.ஏ.எஸ். நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம் புதூர், கிளியம்பட்டி, ரகுபதி நாயக்கன்பாளையம், காகத்தான்வலசு.

    இத்தகவலை ஈரோடு தெற்கு செயற் பொறியாளர் முத்துவேல் தெரிவித்தார்.

    Next Story
    ×