என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
போலி விசாவில் வெளிநாடு அனுப்பி வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி- நண்பர் கைது
ஆலந்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 28) எலக்ட்ரீசியன்.
இவரும், இவரது நண்பரான டோமினிக் ராஜ் என்பவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் டோமினிக் ராஜ் ரஷியா நாட்டில் உள்ள அர்மேனியாவில் அதிக சம்பளத்தில் எலக்ட்ரீசியன் வேலை உள்ளது. ரூ.5 லட்சம் தந்தால் அந்த வேலைக்கு அனுப்பி வைக்கிறேன் என மூர்த்தியிடம் கூறினார்.
இதை நம்பிய மூர்த்தி வட்டிக்கு ரூ. 5 லட்சம் கடன் வாங்கி டோமினிக்ராஜிடம் கொடுத்தார்.
பணத்தை பெற்றுக் கொண்ட அவர் கடந்த ஆண்டு விசா கொடுத்து மூர்த்தியை ரஷியாவுக்கு அனுப்பினார்.
அங்குள்ள விமான நிலையத்தில் மூர்த்தியின் விசா, பணி நியமன ஆணை உள்ளிட்ட ஆவணங்களை பார்த்த அதிகாரிகள் அவை போலியானவை என தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தூதரகம் மூலம் மூர்த்தி சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் டோமினிக்ராஜியிடம் பணத்தை திருப்பி கேட்டார். அப்போது அவர் மூர்த்தியை மிரட்டினார்.
இதுகுறித்து மூர்த்தி விமான நிலைய போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டோமினிக்ராஜை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்