என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரும்புக்காக லாரியை ‘சிறை’ பிடித்த யானைகள் - டிரைவர் இறங்கி தப்பி ஓட்டம்
Byமாலை மலர்7 Jan 2020 10:35 AM GMT (Updated: 7 Jan 2020 10:35 AM GMT)
சத்தியமங்கலம் அருகே கரும்புக்காக லாரியை சிறை பிடித்த யானைகளை கண்ட டிரைவர் தப்பி ஓடினர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட காரப்பள்ளம் பகுதியில் நேற்று மாலை ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
மைசூரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு வந்த இந்த லாரி காரப்பள்ளம் பகுதிக்கு வந்த போது திடீரென 2 யானைகள் ரோட்டுக்கு வந்தது. திடீரென லாரி முன் 2 யானைகள் வந்ததை கண்ட டிரைவர் வெலவெலத்து போனார்.
ஒரு யானை லாரியின் முன்னே நிற்க இன்னொரு யானை லாரியில் கரும்பு உள்ளதா? என மோப்பம் பிடித்தது.
கரும்பு லாரி என நினைத்து லாரியை 2 யானைகளும் மறித்ததை புரிந்து கொண்ட லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்தி குதித்து தப்பி ஓடிவிட்டார்.
சுமார் 30 நிமிடம் அந்த 2 யானைகளும் லாரியை சுற்றி.... சுற்றி வந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 30 நிமிடத்துக்கு பிறகு 2 யானைகளும் காட்டுக்குள் புகுந்தது. இதன் பிறகே போக்குவரத்து சீரானது.
இதை தொடர்ந்து லாரியை நிறுத்தி விட்டு சென்ற டிரைவரும் மீண்டும் வந்து லாரியை எடுத்து சென்றார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட காரப்பள்ளம் பகுதியில் நேற்று மாலை ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
மைசூரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு வந்த இந்த லாரி காரப்பள்ளம் பகுதிக்கு வந்த போது திடீரென 2 யானைகள் ரோட்டுக்கு வந்தது. திடீரென லாரி முன் 2 யானைகள் வந்ததை கண்ட டிரைவர் வெலவெலத்து போனார்.
ஒரு யானை லாரியின் முன்னே நிற்க இன்னொரு யானை லாரியில் கரும்பு உள்ளதா? என மோப்பம் பிடித்தது.
கரும்பு லாரி என நினைத்து லாரியை 2 யானைகளும் மறித்ததை புரிந்து கொண்ட லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்தி குதித்து தப்பி ஓடிவிட்டார்.
சுமார் 30 நிமிடம் அந்த 2 யானைகளும் லாரியை சுற்றி.... சுற்றி வந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 30 நிமிடத்துக்கு பிறகு 2 யானைகளும் காட்டுக்குள் புகுந்தது. இதன் பிறகே போக்குவரத்து சீரானது.
இதை தொடர்ந்து லாரியை நிறுத்தி விட்டு சென்ற டிரைவரும் மீண்டும் வந்து லாரியை எடுத்து சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X