search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த நாகை வாலிபர் கைது

    நாகையில் ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை ஜெகநாதபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது மகள் கடந்த 1-ந் தேதி இரவு சர்ச் சென்றவர் வீடு திரும்பவில்லை என்று சிறுமியின் பெற்றோர் நாகை டவுன் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் அந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி கீவளூர் பகுதியைச் சேர்ந்த நரேந்திரன் (24) கோவை அழைத்து சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று 2 பேரையும் நாகை அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    இதில் நரேந்திரன் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அங்குள்ள விடுதியில் தங்கி உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தமிழரசி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நரேந்திரனை கைது செய்தார்.
    Next Story
    ×