என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெல் பயிர்கள்
    X
    அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள நெல் பயிர்கள்

    ஈரோடு மாவட்டத்தில் நெல் விளைச்சலில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

    இந்த ஆண்டு நோய் தாக்குதல் எதுவும் இல்லாமல் நெல் மணிகள் இயற்கையாக விளைந்துள்ளது. நெல் அறுவடைக்கு பிறகும் இதே நிலை நீடித்தால் மீண்டும் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடியில் ஈடுபடுவார்கள்.
    சூரம்பட்டி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பரவலாக மழை பெய்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை அடைந்துள்ளது.

    மேலும் மாவட்டத்திலுள்ள வரட்டுப்பள்ளம் அணை குண்டேரிப்பள்ளம் அணை ஏரி குளங்கள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் போதிய அளவில் இருப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதை தொடர்ந்து விவசாயிகள் தங்களது நிலங்களில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்றவற்றை பயிரிட்டு வருகிறார்கள். ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் இந்த ஆண்டு 3,500 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளனர்.

    இந்த நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் காட்சியளிக்கின்றன காலிங்கராயன் பாளையம், பெரிய அக்ரகாரம், வைராபாளையம், பெரிய செட்டிபாளையம், சாவடிபாளையம் போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டு உள்ள நெல் பெயர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.

    அறுவடை தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:

    இந்த மாதம் முதல் வாரத்தில் இந்த பகுதிகளில் அறுவடை தொடங்கி விடும். இந்த ஆண்டு நோய் தாக்குதல் எதுவும் இல்லாமல் நெல் மணிகள் இயற்கையாக விளைந்துள்ளது. இந்த ஆண்டு மழை, வெயில், பனி போன்ற தட்ப வெப்பநிலை விவசாயத்திற்கு இதுவரை சாதகமாகவே அமைந்துள்ளது.

    இதனால் இந்த ஆண்டு பயிர் சாகுபடி அமோகமாக இருக்கும் நெல் அறுவடைக்கு பிறகும் இதே நிலை நீடித்தால் மீண்டும் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடியில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×