என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணிப்பேட்டையில் கிணற்றில் வீசி குழந்தை கொலை - போலீசார் விசாரணை
Byமாலை மலர்1 Jan 2020 9:15 AM GMT (Updated: 1 Jan 2020 9:15 AM GMT)
ராணிப்பேட்டையில் கிணற்றில் வீசி பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை காரை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான விளையாட்டு மைதானம் உள்ளது.
இங்கு பயனற்ற நிலையில் கிணறு இருக்கிறது. கிணற்றிலிருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் கிணற்றில் எட்டி பார்த்தபோது கிணற்றில் குழந்தையின் உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி அசோக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் மிதந்த குழந்தையின் பிணத்தை மீட்டனர்.
குழந்தையின் உடல் முழுவதும் மீன்கள் கடித்து அழுகிய நிலையில் இருந்தது. குழந்தையை கிணற்றில் வீசி ஒரு வாரம் ஆகியிருக்கலாம் என தெரிகிறது.
பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கிணற்றில் வீசி சென்றது யார்? எதற்காக வீசி சென்றனர்? கள்ளக்காதலில் பிறந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை காரை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான விளையாட்டு மைதானம் உள்ளது.
இங்கு பயனற்ற நிலையில் கிணறு இருக்கிறது. கிணற்றிலிருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் கிணற்றில் எட்டி பார்த்தபோது கிணற்றில் குழந்தையின் உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி அசோக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் மிதந்த குழந்தையின் பிணத்தை மீட்டனர்.
குழந்தையின் உடல் முழுவதும் மீன்கள் கடித்து அழுகிய நிலையில் இருந்தது. குழந்தையை கிணற்றில் வீசி ஒரு வாரம் ஆகியிருக்கலாம் என தெரிகிறது.
பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை கிணற்றில் வீசி சென்றது யார்? எதற்காக வீசி சென்றனர்? கள்ளக்காதலில் பிறந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X