search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாமக
    X
    பாமக

    ஈரோடு புறநகர் மாவட்ட பா.ம.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

    ஈரோடு புறநகர் மாவட்ட பா.ம.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு புறநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு புறநகர் மாவட்டம் அந்தியூர் வட்டம் குருவரெட்டியூர் பா.ம.க. மாநில சட்ட பாதுகாப்பு குழு துணைச் செயலாளராக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கட்சி கொள்கைகளுக்கு முரண்பாடாக கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்.

    இதனால் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி, கட்சி தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் ஒப்புதலுடன் கிருஷ்ணமூர்த்தியை இன்று முதல் பா.ம.க.வில் இருந்து அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்படுகிறார்.

    எனவே பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் யாரும் அவருடன் எந்தவிதமான தொடர்புகள் வைத்து கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×