என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் கொலை- தொழிலாளி கைது
Byமாலை மலர்27 Dec 2019 7:12 AM GMT (Updated: 27 Dec 2019 7:12 AM GMT)
மாமல்லபுரம் அருகே காதலை ஏற்க மறுத்ததால் 17 வயது இளம்பெண்ணை கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலத்தில் வசித்து வருபவர் ஜெயராஜ். கட்டிட மேஸ்திரியான இவர், கட்டிட வேலைக்கு ஆட்களை அனுப்பியும் வந்தார்.
இவரது மகள் லாவண்யா (வயது 17) பிளஸ்-2 முடித்துள்ள இவர் மேல்படிப்பு படிக்காமல் பெற்றோருடன் தங்கி இருந்தார்.
ஜெயராஜ் வேலை செய்யும் பட்டிபுலத்தில் உள்ள கட்டிடத்தில் ஆந்திர மாநிலம் விஜயநகரை சேர்ந்த துர்க்காராவ் (21) என்பவர் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்தார்.
அப்போது துர்க்காராவ், லாவண்யாவுடன் பழகி காதலை ஏற்குமாறு வற்புறுத்தினார். ஆனால் லாவண்யா காதலை ஏற்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை காதலை ஏற்க மறுத்த லாவண்யாவை கத்தியால் குத்தி துர்க்காராவ் கொலை செய்தார். அவரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர்.
துர்க்காராவ் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:-
லாவண்யாவின் தந்தை கட்டிட வேலைகளுக்கு கூலி ஆட்கள் அனுப்பும் காண்ட்ராக்டராக இருந்தார். அவரிடம் தான் நான் வேலை பார்த்து வந்தேன்.
அப்போது தான் நானும் லாவண்யாவும் நண்பர்களாக பழகி வந்தோம். கடந்த 6 மாதங்களுக்கு முன் நான் லாவண்யாவை தொட்டு பேசியதை அவரது தந்தை பார்த்து விட்டார்.
இதனால் என்னை வேலையில் இருந்து நிறுத்தி விட்டு நான் தங்கியிருந்த செட்டையும் காலி செய்ய சொல்லிவிட்டார்.
இதையடுத்து நான் அங்கிருந்து காலி செய்து விட்டு வேளச்சேரியில் தங்கி வேலை செய்து வந்தேன். எனினும் லாவண்யாவுடன் சிரித்து பேசி தொட்டு விளையாடிய நாட்கள் என் கண்முன் வந்து சென்றது.
எனவே அவளிடம் சென்று காதலை உறுதிப்படுத்த நேற்று காலை லாவண்யா குளிக்க வரும் குளியல் அறை அருகே காத்திருந்தேன். அவள் குளியல் அறைக்குள் சென்றதும் நானும் உள்ளே நுழைந்து என் காதலை சொன்னேன். ஆனால் அவள் 17 வயது மைனர் பருவத்தை காரணம் காட்டி காதலை ஏற்க மறுத்து வெளியே போகும்படி கூறினாள். நான் காலை பிடித்து கெஞ்சியும் காதலை ஏற்க மறுத்து கூச்சலிட்டார்.
இதையடுத்து எனக்கு கிடைக்காத லாவண்யா யாருக்கும் கிடைக்க கூடாது என்று நான் தற்காப்புக்காக கொண்டு சென்ற கத்தியால் அவளது வயிறு மற்றும் மார்பில் குத்தி கொன்றேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஒருதலை காதலில் இளம்பெண்ணை வாலிபர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலத்தில் வசித்து வருபவர் ஜெயராஜ். கட்டிட மேஸ்திரியான இவர், கட்டிட வேலைக்கு ஆட்களை அனுப்பியும் வந்தார்.
இவரது மகள் லாவண்யா (வயது 17) பிளஸ்-2 முடித்துள்ள இவர் மேல்படிப்பு படிக்காமல் பெற்றோருடன் தங்கி இருந்தார்.
ஜெயராஜ் வேலை செய்யும் பட்டிபுலத்தில் உள்ள கட்டிடத்தில் ஆந்திர மாநிலம் விஜயநகரை சேர்ந்த துர்க்காராவ் (21) என்பவர் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்தார்.
அப்போது துர்க்காராவ், லாவண்யாவுடன் பழகி காதலை ஏற்குமாறு வற்புறுத்தினார். ஆனால் லாவண்யா காதலை ஏற்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை காதலை ஏற்க மறுத்த லாவண்யாவை கத்தியால் குத்தி துர்க்காராவ் கொலை செய்தார். அவரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர்.
துர்க்காராவ் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:-
லாவண்யாவின் தந்தை கட்டிட வேலைகளுக்கு கூலி ஆட்கள் அனுப்பும் காண்ட்ராக்டராக இருந்தார். அவரிடம் தான் நான் வேலை பார்த்து வந்தேன்.
அப்போது தான் நானும் லாவண்யாவும் நண்பர்களாக பழகி வந்தோம். கடந்த 6 மாதங்களுக்கு முன் நான் லாவண்யாவை தொட்டு பேசியதை அவரது தந்தை பார்த்து விட்டார்.
இதனால் என்னை வேலையில் இருந்து நிறுத்தி விட்டு நான் தங்கியிருந்த செட்டையும் காலி செய்ய சொல்லிவிட்டார்.
இதையடுத்து நான் அங்கிருந்து காலி செய்து விட்டு வேளச்சேரியில் தங்கி வேலை செய்து வந்தேன். எனினும் லாவண்யாவுடன் சிரித்து பேசி தொட்டு விளையாடிய நாட்கள் என் கண்முன் வந்து சென்றது.
எனவே அவளிடம் சென்று காதலை உறுதிப்படுத்த நேற்று காலை லாவண்யா குளிக்க வரும் குளியல் அறை அருகே காத்திருந்தேன். அவள் குளியல் அறைக்குள் சென்றதும் நானும் உள்ளே நுழைந்து என் காதலை சொன்னேன். ஆனால் அவள் 17 வயது மைனர் பருவத்தை காரணம் காட்டி காதலை ஏற்க மறுத்து வெளியே போகும்படி கூறினாள். நான் காலை பிடித்து கெஞ்சியும் காதலை ஏற்க மறுத்து கூச்சலிட்டார்.
இதையடுத்து எனக்கு கிடைக்காத லாவண்யா யாருக்கும் கிடைக்க கூடாது என்று நான் தற்காப்புக்காக கொண்டு சென்ற கத்தியால் அவளது வயிறு மற்றும் மார்பில் குத்தி கொன்றேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஒருதலை காதலில் இளம்பெண்ணை வாலிபர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X