search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல் கைது
    X
    தாக்குதல் கைது

    கூடலூர் அருகே செவிலியரை தாக்கிய வாலிபர் கைது

    கூடலூர் அருகே செவிலியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புளியம்பாராவை சேர்ந்தவர் பிரவீன்(26).

    இவர் சம்பவத்தன்று தனது உறவினர் ஒருவரை சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு செவிலியராக தனலட்சுமி என்பவர் பணிபுரிந்து வந்தார்.

    பிரவீனின் உறவினருக்கு தனலட்சுமி சிகிச்சை அளித்தபோது பிரவீனுக்கும், தனலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பிரவீன் தனலட்சுமியை சரமாரியாக தாக்கினார்.

    இதில் அவர் காயம் அடைந்தார். இதுகுறித்து தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×