என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து வசதிகளும் தயார்

    ஈரோட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் யொட்டி வாக்குசாவடி மையங்களில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் பார்வையாளர் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளராக விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டும் அதிகாரிகளுக்கு ஆலோசனையும் வழங்கிவருகிறார்.  

    இன்று தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 323 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிக்க வெப் குழு, வீடியோ குழு, தேர்தல் நுண்பார்வையாளர்கள் குழு அமைக்கப்பட்டு அவர்கள் தீவிரமாக கண்காணிப்பார்கள் வாடிக்கையாளர்களுக்கு பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.  
    இவர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் பறக்கும் படையினர் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை எங்கு  செல்கிறார்கள் என்பது குறித்து தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.

    திருமண மண்டப உரிமையாளர்கள் விடுதி உரிமையாளர்கள் வரவழைத்து ஏற்கனவே ஆலோசனை வழங்கி உள்ளோம். பெட்ரோல் பங்க் செல்போன் ரீசார்ஜ் ஏஜென்சி ஆகியோரிடமும் பரிசுப்பொருட்கள் குறித்து முக்கியமாக ஆலோசனை வழங்கி உள்ளோம்.  

    வாரச்சந்தை டாஸ்மாக் விற்பனையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். ஒரு வாக்குச் சாவடி மையத்தில் 72 வகையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இவை முறையாக வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று உள்ளதா? என்பதை கண்காணித்து வருகிறோம் வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க கூடுதலாக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×